Friday, October 16, 2009

நிலா


ஆயிற்று நீண்ட நெடிய நாற்பது வருடங்கள். கவிஞர்கள் பேனா உதறி உதறி சலித்துப் போன நிலவில் மனிதன் காலடி எடுத்து வைத்து நடந்து ஜூலை இருபதாம் தியதியுடன் நாற்பது வருடங்கள் முடிந்து விட்டன. நிலாவில் வடை சுடும் பாட்டியைப் போய் பார்த்து வந்த நீல் ஆம்ஸ்ட்ராங்கும், ஆல்டிரினும், மைக்கேல் காலின்ஸும் இப்போது தாத்தாக்களாகிவிட்டார்கள். நீல் ஆம்ஸ்ட்ராங்கிற்கும், மைக்கேல் காலிங்ஸ் க்கும் வயது 78. ஆல்ட்ரின் வயது 79 !
உலகையே வியப்புக்கும், சிலிர்ப்புக்கும், சந்தேகத்துக்கும் உள்ளாக்கிய இந்த “கிரேட்டஸ்ட் வாக்” என அழைக்கப்படும் மனிதனின் முதல் நிலவு நடை உணர்ச்சி பூர்வமாக திரும்பிப் பார்க்கப்பட்டது. நாற்பது ஆண்டுகளுக்கு முன் 1969 ல் இளைஞர்களாக பூமிக்கு வெளியே போய் நிலவைப் பார்த்து வந்தவர்கள் இப்போது முதுமைக்காலத்தில் சந்தித்து தங்கள் இறந்த காலத்தின் பறந்த நினைவுகளைப் புரட்டிப் பார்த்து ஆனந்தமடைந்தார்கள்.நிலா, நிலவு, அம்புலி, சந்திரன் என்று் பலவாறு கூறப்படும் இக்கோளம் வானிலே பூமியைச் சுற்றி வருகின்றது. இரவிலே குளிர்வாக ஒளிதரும் இக்கோளத்தை வானிலே காணலாம். குழந்தைகளாக இருக்கையிலே தாய் நிலாவைக்காட்டி 'நிலா நிலா இங்கே வா' என்று சொல்லி சோறூட்டுதல் பெருவழக்கு.
இந்த நிலாதான் பூமியின் ஒரே இயற்கையான துணைக்கோள் இது பூமியைச் சுற்றி வர சராசரி 27.32 நாட்கள் ஆகின்றது. இந்த நிலா பூமியை ஒரு நீள் வட்டப் பாதையில் சுற்றிவருவதாகக் கண்டு பிடித்துள்ளார்கள். பூமிக்கும் நிலாவுக்கும் சராசரி தொலைவு 384, 403 கி.மீ. துணைக்கோள் என்று கண்டு இருக்கிறார்கள்

No comments:

Post a Comment