Friday, October 30, 2009

திராட்சை


திராட்சை ஒரு சத்தான எளிதில் செரிக்கக் கூடிய சுவையான பழம். திராட்சை மலைப் பள்ளத்தாக்குகளில் நன்கு விளையும். பச்சை, கருப்பு மற்றும் நீல நிறங்களிலும் கிடைக்கிறது. திராட்சையில் உள்ள குளூகோஸ், சுக்ரோஸ் மற்றும் ஆர்கானிக் அமிலம் இரைப்பையை சுத்தம் செய்வதுடன் உடனடி மலமிளக்கியாகவும் செயல்படுகிறது. இதற்கு தினமும் 350 கிராம் திராட்சை உண்ண வேண்டும். வயிற்றில் ஏற்படும் செரிமானக் கோளாறுகளையும் உடனடியாக சரி செய்யும் ஆற்றல் திராட்சைக்கு உஇதயக் கோளாறு உள்ளவர்கள் தினமும் ஒருவேளை உணவாக திராட்சையை மட்டும் உண்டு வர வேண்டும். இதனால் இதயத்தில் இருக்கும் வலி சிறிது சிறிதாகக் குறைந்து இதயம் பலப்படுவதுடன் நெஞ்சு படபடப்பும் சரியாகும்ண்டு. திராட்சை பழத்தை நன்றாகக் கழுவிய பின்னரே உண்ண வேண்டும். ஜூஸ் தயாரித்தாலும் உடனே அருந்தினால் தான் முழுப் பயனும் நமக்கு கிடைக்கும். ஜூஸை விட பழங்களாகவே சாப்பிடுவது நல்லது. உலர்ந்த பழங்களை ஊற வைத்து உண்ணலாம். சளி, இருமல், தொண்டை வலி இருக்கும் காலங்களில் திராட்சையை தவிர்ப்பது நலம் வரலாறு காணாத காலத்திருந்தே திராட்சை மனிதனால் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. மத்தியத் தரைக்கடல் நாடுகளில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் திராட்சை சாறிலிருந்து ஒயின் தயாரிக்கும் பழக்கம் இருந்திருக்கிறது. பெரும்பாலான திராட்சைகள், ஐரோப்பியத் திராட்சைக் கொடிச் சிற்றினமான விட்டிஸ் வினிபேரா (Vitis vinifera) என்பதில் இருந்து கிடைக்கிறது. இது நடுநிலக்கடல் பகுதி மற்றும் மத்திய ஆசியப் பகுதிகளைத் தாயகமாகக் கொண்டது. அனைத்து வகை திராட்சைகளும் அப்படியே உண்ணத் தக்கவைதான். ஒரு சில வகைகள் உலர் திராட்சை செய்யவும். சாறு எடுக்கவும், பழக்கூழ் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது.

2 comments:

  1. Nega Panierukira Posting Yellamae Romba Nalla Eruku. Ennu Niraiya Posting Pannanum Yennudaiya Valthukkal.

    ReplyDelete
  2. You Are Doing Good Job.
    Keep It Up.

    ReplyDelete